< Back
மாநில செய்திகள்
பென்னாகரம் அருகே  கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
தர்மபுரி
மாநில செய்திகள்

பென்னாகரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
29 Sep 2022 6:45 PM GMT

பென்னாகரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு

பென்னாகரம்:

பென்னாகரம் அருகே உள்ள தாசம்பட்டி குழிப்பட்டி இருளர் காலனியை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 40). இவர் வனப்பகுதியில் கிடைக்கும் கிழங்கு, சுண்டைக்காய் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து விற்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை முனியப்பன் குளிப்பதற்காக தனது வீட்டிற்கு அருகில் உள்ள சஞ்சீவன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றுக்கு சென்றார். முனியப்பனுக்கு ஏற்கனவே வலிப்பு நோய் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கிணற்றுக்கு அருகில் நின்ற முனியப்பனுக்கு வலிப்பு ஏற்பட்டதால் அவர் தவறி கிணற்றுக்குள் விழுந்தார்.

இதற்கிடையே முனியப்பன் அணிந்திருந்த செருப்பு மிதந்ததை கண்ட அக்கம் ்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு படையினர் மற்றும் பென்னாகரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு படை வீரர்கள் போலீசார் உதவியுடன் கிணற்றில் இறந்த நிலையில் முனியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்