< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
ஓசூரில் விபத்தில் கிரானைட் நிறுவன ஊழியர் பலி
|6 Sep 2022 5:20 PM GMT
ஓசூரில் விபத்தில் கிரானைட் நிறுவன ஊழியர் பலி
ஓசூர்:
ஓசூர் குமுதேப்பள்ளியை சேர்ந்தவர் பேட்ராய ரெட்டி (வயது 47). இவர் மோரனப்பள்ளியில் உள்ள கிரானைட் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 4-ந் தேதி இரவு ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் குமுதேப்பள்ளியில் ஒரு ஓட்டல் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பேட்ராய ரெட்டி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.