< Back
மாநில செய்திகள்
விவசாயி மர்மசாவு; போலீசார் விசாரணை
தர்மபுரி
மாநில செய்திகள்

விவசாயி மர்மசாவு; போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
23 July 2022 5:50 PM GMT

விவசாயி மர்மசாவு; போலீசார் விசாரணை

நல்லம்பள்ளி:

தொப்பூர் அருகே பெடரான்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 37) விவசாயி. இவருடைய மனைவி கவிதா. இருவருக்கும் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை விவசாயி மகாலிங்கம் உடலில் பல்வேறு இடங்களில் காயங்களுடன் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் மகாலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விவசாயி மகாலிங்கம் மர்ம இறப்பு குறித்து தொப்பூர் போலீசார் மர்மசாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்