< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
வெளிநாட்டில் இருந்து சுற்றுலா வந்தவர் திடீர் சாவுபோலீசார் விசாரணை
|3 Aug 2023 7:00 PM GMT
மலேசியாவில் வசித்து வந்தவர் முனியாண்டி (வயது 55). இவர் தனது மனைவி, மகன் மற்றும் 2 மகள்களுடன் சுற்றுலா விசாவில் தர்மபுரிக்கு வந்தார். இதையடுத்து தர்மபுரியில் உள்ள உறவினரின் வீட்டில் தங்கி பல்வேறு இடங்களை சுற்றிபார்க்க திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முனியாண்டிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.
வெளிநாட்டில் இருந்து குடும்பத்துடன் சுற்றுலா வந்தவர் திடீரென இறந்த காரணம் என்ன? என்பது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.