< Back
மாநில செய்திகள்
பாம்பு கடித்து விவசாயி பலி
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

பாம்பு கடித்து விவசாயி பலி

தினத்தந்தி
|
10 July 2023 7:00 PM GMT

தேன்கனிக்கோட்டை:

அஞ்செட்டி அருகே உள்ள நாட்றாம்பாளையம் ஊராட்சி என்.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 63). விவசாயியான இவர் ஆடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி ஆடுகளுக்கு தனது விவசாய நிலத்தில் தழை ஒடிக்க சென்றார். அப்போது மரத்தின் அடியில் இருந்த பாம்பை தவறுதலாக மிதித்ததில் பாம்பு கடித்தது. உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு அஞ்செட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கவேல் இறந்தார். இது குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்