< Back
மாநில செய்திகள்
3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை

தினத்தந்தி
|
2 Feb 2023 6:45 PM GMT

3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை

நாகை மீனவர்கள் நேற்று 3-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் தங்களது பைபர் படகு மற்றும் விசைப்படகுகளை கடுவையாற்று கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர். இதனால் நாகை மாவட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி சார்ந்த தொழிலாளர்கள் வருமானத்தை இழந்துள்ளனர்.

இதேபோல் நாகை மாவட்டத்தில் 1 லட்சத்துக்கு மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்தது. ஒரு சில பகுதிகளில் அறுவடை பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் கனமழையால் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்தது.

மேலும் செய்திகள்