< Back
மாநில செய்திகள்
தர்மபுரி அருகே2-வது திருமணம் செய்ததாக கணவர் மீது பெண் புகார்
தர்மபுரி
மாநில செய்திகள்

தர்மபுரி அருகே2-வது திருமணம் செய்ததாக கணவர் மீது பெண் புகார்

தினத்தந்தி
|
31 Dec 2022 6:45 PM GMT

தர்மபுரி மாவட்டம் ஜருகு பகுதியை சேர்ந்தவர் அருள் தேவி (வயது 27). இவருடைய கணவர் மஞ்சு (30) வேன் டிரைவர். இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் அருள் தேவி தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் தன்னிடம் தகராறில் ஈடுபட்ட கணவர், வேறு ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டதாகவும், அதற்கு உறவினர்கள் சிலர் உடந்தையாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மஞ்சு உள்ளிட்ட 3 பேர் மீது தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்