< Back
மாநில செய்திகள்
அபிராமி அம்மனை பல்லக்கில் சுமந்தபடி பக்தர்கள் கிரிவலம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

அபிராமி அம்மனை பல்லக்கில் சுமந்தபடி பக்தர்கள் கிரிவலம்

தினத்தந்தி
|
28 Sep 2023 9:30 PM GMT

திண்டுக்கல்லில் அபிராமி அம்மனை பல்லக்கில் சுமந்தபடி பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

திண்டுக்கல் மலைக்கோட்டையின் உச்சியில் மிகவும் பழமையான பத்மகிரீஸ்வரர்-அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாமி சிலைகள் இல்லாததால், 2 நூற்றாண்டுகளுக்கு மேலாக வழிபாடுகள் நடைபெறுவது இல்லை. எனினும் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் பத்மகிரீஸ்வரர்-அபிராமி அம்மனை பக்தர்கள் மனமுருக வேண்டி கொண்டு மலைக்கோட்டையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று புரட்டாசி மாத பவுர்ணமி ஆகும். இதையொட்டி பெண்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் உள்பட ஏராளமானோர் கிரிவலம் சென்றனர். அப்போது பத்மகிரீஸ்வரர்-அபிராமி அம்மன் சிலைகளை பல்லக்கில் சுமந்தபடி பக்தி பாடல்களை பாடியபடி பக்தர்கள் கிரிவலம் சென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் கிரிவல பாதையில் உள்ள கோவில்களில் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

மேலும் செய்திகள்