< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
பள்ளி வளாகத்தில் கதண்டுகள் அழிப்பு
|21 Jun 2022 7:35 PM GMT
பள்ளி வளாகத்தில் கதண்டுகள் அழிக்கப்பட்டன.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நள்ளாம்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்த புளிய மரத்தில் கதண்டுகள் கூடுகட்டி இருந்தன. இதனைக் கண்ட பள்ளி ஆசிரியர்கள் செந்துறை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று இரவு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலர்(பொறுப்பு) அழகானந்தம் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் மணிவண்ணன், சரவணன், இந்திரஜித், ராஜா ஆகியோர் இரவில் சென்று மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த கதண்டுகளை அழித்தனர்.