< Back
மாநில செய்திகள்
3000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

3000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

தினத்தந்தி
|
25 Sep 2022 6:45 PM GMT

கல்வராயன்மலையில் 3000 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது.

கச்சிராயப்பாளையம்.

கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார் கல்வராயன்மலையில் உள்ள மல்லிகைப்பாடி வனப்பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் 3000 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அதனை கீழே கொட்டி அழித்தனர். தொடர்ந்து சாராய ஊறலை பதுக்கி வைத்து இருந்தவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்