< Back
மாநில செய்திகள்
கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு
கடலூர்
மாநில செய்திகள்

கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு

தினத்தந்தி
|
29 May 2023 6:45 PM GMT

கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்றாா்.

கடலூர்:

கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த டாக்டர் கரிகால் பாரி சங்கர் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு பதிலாக ராணிப்பேட்டை உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய பிரபு, கடலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து நேற்று காலை பிரபு, கடலூர் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு புதுநகர் போலீசார், அனைத்து மகளிர் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள ஓடுகம்பட்டி கிராமத்தை சேர்ந்த துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு என்ஜினீயரிங் படித்துள்ளார். பின்னர் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று, ராணிப்பேட்டை உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டாக கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்