< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
|25 April 2023 4:43 PM GMT
பழனி தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில், பழனி தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் பழனி வட்டக்கிளை தலைவர் பிரேம்குமார் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.