< Back
மாநில செய்திகள்
திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
வேலூர்
மாநில செய்திகள்

திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
4 Nov 2022 4:11 PM GMT

வேலூரில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே வேலூர் மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் மதிவதனி தலைமை தாங்கினார். திராவிடர் கழக மண்டல தலைவர் வி.சடகோபன், மாவட்ட தலைவர் அன்பரசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய பல்கலைக்கழகங்களில் இந்தி திணிப்பதை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்