< Back
மாநில செய்திகள்
ஆக்கிரமித்து கட்டப்பட்ட 14 கடைகள்-வீடு இடித்து அகற்றம்
திருச்சி
மாநில செய்திகள்

ஆக்கிரமித்து கட்டப்பட்ட 14 கடைகள்-வீடு இடித்து அகற்றம்

தினத்தந்தி
|
30 March 2023 8:36 PM GMT

ஆக்கிரமித்து கட்டப்பட்ட 14 கடைகள்-வீடு இடித்து அகற்றப்பட்டன.

மணப்பாறை:

ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி

மணப்பாறை அருகே உள்ள பொத்தமேட்டுப்பட்டியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து, கடைகள் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தன. ஆக்கிரமிப்பு சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து, ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்களுக்கு கால அவகாசம் கொடுத்து கடிதம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று வருவாய்த்துறையினர், நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதில் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு வழங்கப்பட்டிருந்த மின் இணைப்புகளை மின்வாரிய அதிகாரிகள் துண்டித்தனர். ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருந்த சிலர் தங்களது பொருட்களை தாங்களாகவே அகற்றிக்கொண்டனர்.

கடைகள்-வீடு இடிப்பு

இதையடுத்து மீதம் இருந்தவற்றை அதிகாரிகள், பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். இதில் மொத்தம் 14 கடைகள் மற்றும் ஒரு வீடு இடித்து அகற்றப்பட்டது.

மேலும் செய்திகள்