< Back
மாநில செய்திகள்
நில அளவீடு தாமதம் தொடர்பான வழக்கு - நில அளவையர்கள் அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
மாநில செய்திகள்

நில அளவீடு தாமதம் தொடர்பான வழக்கு - நில அளவையர்கள் அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு

தினத்தந்தி
|
9 July 2023 10:03 AM GMT

நில அளவீடு தாமதம் குறித்து தலைமை மற்றும் வட்டார நில அளவையர்கள் அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவுவிட்டுள்ளது.

மதுரை,

திருச்சி மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த தங்கவேல், சுப்பிரமணியன் ஆகியோர் நில அளவீடு செய்ய கட்டணம் செலுத்தியும் அதிகாரிகள் நிலத்தை அளக்க செய்ய தாமதம் செய்வதாக புகார் தெரிவித்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக விமர்சித்தனர். மேலும் நில அளவையர்களுக்கு அபராதம் விதிக்க நினைப்பதாக தெரிவித்த நீதிபதிகள், நில அளவீடு தாமதம் குறித்து தலைமை மற்றும் வட்டார நில அளவையர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.


மேலும் செய்திகள்