< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
வாகனம் மோதி மான் சாவு
|10 Oct 2022 7:34 PM GMT
ஆலங்குளம் அருகே வாகனம் மோதி மான் பரிதாபமாக இறந்தது.
ஆலங்குளம்,
ஆலங்குளம் அருகே உள்ள மேலாண்மறைநாடு கிராமத்தில் உள்ள தேவியாற்றின் இரு கரைகளில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இங்கு எண்ணற்ற மான்கள் வசித்து வருகின்றன. இந்தநிலையில் இங்கிருந்து மான் ஒன்று கீழாண்மறைநாடு கிராமம் அருகே உள்ள கூடை பிள்ளையார் கோவில் அருகே செல்லும் போது வாகனம் மோதி இறந்தது. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.