< Back
மாநில செய்திகள்
நாய்கள் கடித்து மான் சாவு
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

நாய்கள் கடித்து மான் சாவு

தினத்தந்தி
|
5 July 2022 5:58 PM GMT

சீர்காழி அருகே நாய்கள் கடித்து மான் உயிரிழந்தது.

திருவெண்காடு:

சீர்காழி அருகே உள்ள பாகசாலை, தேத்தாக்குடி, கண்டமங்கலம், தென்னாலகுடி உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறை மூலம் காப்புக்காடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த காடுகளில் அரிய வகை புள்ளி மான்கள் உள்ளன. இந்த மான்கள் சில நேரங்களில் வழிதவறி ஊருக்குள் வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று பாகசாலை கிராமத்திற்கு வழி தவறி வந்த ஒரு பெண் புள்ளி மானை நாய்கள் கடித்து கொன்றன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சீர்காழி வனத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மானை மீட்டு வனப்பகுதியில் புதைத்தனர். இறந்த மானுக்கு 2 வயது இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்