< Back
மாநில செய்திகள்
மான் சாவு
தென்காசி
மாநில செய்திகள்

மான் சாவு

தினத்தந்தி
|
24 March 2023 6:45 PM GMT

ஆலங்குளம் அருகே மான் இறந்து கிடந்தது .

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே ராமர் கோவில் வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு மான்கள் மற்றும் காட்டு பன்றிகள் ஏராளமாக உள்ளன. கோடை காலம் என்பதால் மான்கள் காட்டு பகுதியை விட்டு தோட்டங்களுக்கும், பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கும் தண்ணீர் தேடி வருகின்றன. அப்போது சாலையை கடக்கும்போதும், நாய்களால் தாக்கப்பட்டும் ஏராளமான மான்கள் உயிரிழந்து வருகின்றன.

இந்த நிலையில் ஆலங்குளம் அருகே பூலாங்குளம் கிராமத்தின் கீழ்புறம் உள்ள தோட்டம் ஒன்றில் மான் ஒன்று இறந்து கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் பொன்ராஜ் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் வந்தனர். அங்கு இறந்து கிடந்த சுமார் 1 வயது மதிக்கத்தக்க பெண் மான் உடலை மீட்டு ஆலங்குளம் ராமர் கோவில் வனப்பகுதிக்கு கொண்டு சென்று புதைத்தனர்.

மேலும் செய்திகள்