< Back
மாநில செய்திகள்
நாய்கள் கடித்து மான் சாவு
சிவகங்கை
மாநில செய்திகள்

நாய்கள் கடித்து மான் சாவு

தினத்தந்தி
|
4 Feb 2023 6:45 PM GMT

நாய்கள் கடித்து மான் இறந்தது.

தேவகோட்டை

தேவகோட்டை ஒத்தக்கடை அருகே உள்ள சுடுகாட்டுப் பகுதிக்கு புள்ளி மான் ஒன்று இரை தேடி வந்தது. இதை பார்த்த தெரு நாய்கள் அதை விரட்டி கடித்து குதறியது. இதில் படுகாயம் அடைந்த புள்ளிமான் சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்தது. கண்ணங்குடி சாலை ஓரத்தில் இறந்து கிடந்த அந்த மானை பார்த்தவர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர் புள்ளி மானை பிரேத பரிசோதனை செய்து அப்பகுதியில் உள்ள ஆற்றின் கரைேயாரத்தில் புதைத்தனர்.

மேலும் செய்திகள்