< Back
மாநில செய்திகள்
விவசாயிக்கு கொலை மிரட்டல்: தம்பதி மீது வழக்கு
தேனி
மாநில செய்திகள்

விவசாயிக்கு கொலை மிரட்டல்: தம்பதி மீது வழக்கு

தினத்தந்தி
|
6 Oct 2023 6:45 PM GMT

வீரபாண்டி அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வீரபாண்டி அருகே உள்ள தாடிச்சேரி கண்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 33). விவசாயி. இவரது அக்காள் பிரியா. இவர்கள் இருவருக்கும் சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று பிரேம்குமாரை, பிரியா தகாத வார்த்தைகளில் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரேம்குமார், வீரபாண்டி போலீசில் புகார் கொடுத்தார். அதில், கணவர் செந்தில் கண்ணன் தூண்டுதலின் பேரில் பிரியா கொலை மிரட்டல் விடுத்தாக கூறியிருந்தார். அதன்பேரில் செந்தில் கண்ணன், பிரியா ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்