< Back
மாநில செய்திகள்
கிணற்றில் தவறி விழுந்த அரசு ஊழியர் சாவு
திருச்சி
மாநில செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்த அரசு ஊழியர் சாவு

தினத்தந்தி
|
19 May 2022 9:48 PM GMT

கிணற்றில் தவறி விழுந்த அரசு ஊழியர் உயிரிழந்தார்.

முசிறி:

திருச்சி நம்பர் 1 டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 47). இவர் முசிறி புள்ளியல் துறை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று சேருகுடி கிராமத்தில் நடந்த திருவிழாவிற்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பியபோது, வரும் வழியில் மழை பெய்ததன் காரணமாக முகத்தில்பட்ட சேற்றை கழுவுவதற்காக, கிணற்றில் இறங்கியபோது தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து புகாரின்பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்