< Back
மாநில செய்திகள்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி ஏ.சி. மெக்கானிக் சாவு
தர்மபுரி
மாநில செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி ஏ.சி. மெக்கானிக் சாவு

தினத்தந்தி
|
1 July 2023 7:30 PM GMT

பென்னாகரம்:

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி மத்திகிரியை சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஏசி மெக்கானிக்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மத்திகிரி பகுதியை சேர்ந்தவர் சபிக். இவரது மகன் முகமது யூனிஸ் (வயது 19). ஏ.சி. மெக்கானிக். இவர் நேற்று தனது நண்பர்கள் 8 பேருடன் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தார். அவர்கள் ஒகேனக்கல்லில் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்தனர். பின்னர் நண்பர்கள் அனைவரும் ஆலம்பாடி பகுதியில் காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது முகமது யூனிஸ் ஆழமான பகுதியில் நீந்தி சென்று குளித்துள்ளார். அப்போது அவர் திடீரென தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதைகண்டு நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் காப்பாற்ற முடியவில்லை. இதுகுறித்து அவர்கள் ஒகேனக்கல் போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

உடல் மீட்பு

அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட முகமது யூனிசை தேடினர். அப்போது அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்பு படையினர் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். உடலை பார்த்து நண்பர்கள் கதறி அழுதனர்.

பின்னர் போலீசார் மெக்கானிக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்