< Back
மாநில செய்திகள்
நல்லம்பள்ளி அருகேவிஷ தழையை தின்ற பெண் சாவு
தர்மபுரி
மாநில செய்திகள்

நல்லம்பள்ளி அருகேவிஷ தழையை தின்ற பெண் சாவு

தினத்தந்தி
|
30 Jun 2023 7:30 PM GMT

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் எல்லப்பன். இவரது மனைவி தமிழரசி (வயது 55). இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தமிழரசி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் விஷ தழையை வேகவைத்து தின்று விட்டு மயங்கி கிடந்தார். இதையறிந்த உறவினர்கள், அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று தமிழரசி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து, தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்