< Back
மாநில செய்திகள்
போச்சம்பள்ளி அருகேபஸ் மோதி கூலித்தொழிலாளி சாவு
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

போச்சம்பள்ளி அருகேபஸ் மோதி கூலித்தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
29 Jun 2023 7:30 PM GMT

மத்தூர்:

போச்சம்பள்ளி அடுத்த புலியூர் மேட்டுப்புலியூர் கிராமத்தை சேர்ந்த திருப்பதி மகன் சின்னசாமி (வயது 45). கூலித்தொழிலாளி. இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர் எலுமிச்சம்பள்ளி- கோட்டப்பட்டி சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி நின்று கொண்டிருந்தார். அப்போது விழுப்புரத்தில் இருந்து தர்மபுரி நோக்கி சென்று கொண்டிருந்த மினிபஸ் சின்னசாமி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போச்சம்பள்ளி போலீசார் மினி பஸ், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதனை தொடர்ந்து மினி பஸ்சை ஓட்டிவந்த புதுச்சேரி மாநிலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த தேவேந்திரன் மகன் கோபிநாத் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்