< Back
மாநில செய்திகள்
கம்பைநல்லூர் அருகேஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
தர்மபுரி
மாநில செய்திகள்

கம்பைநல்லூர் அருகேஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு

தினத்தந்தி
|
24 Jun 2023 7:30 PM GMT

மொரப்பூர்:

கம்பைநல்லூர் அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

பள்ளி மாணவன்

தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே உள்ள மல்லசமுத்திரத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மகன் சீனிவாசன் (வயது 6). இவன் அங்குள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற மாணவன் மாலையில் வீடு திரும்பவில்லை. இதையடுத்து மாணவனை பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது மல்லசமுத்திரம் ஏரிக்கரையில் மாணவனின் பள்ளி புத்தகப்பை மற்றும் காலணிகள் கிடந்தன. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் ஏரியில் இறங்கி பார்த்த போது மாணவன் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து அவனது உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

போலீசார் விசாரணை

அப்போது அங்கு திரண்டு இருந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மாணவனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவன் ஏரியில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்