< Back
மாநில செய்திகள்
தொப்பூர் கணவாயில் வாகனம் மோதி பெண் சாவு
தர்மபுரி
மாநில செய்திகள்

தொப்பூர் கணவாயில் வாகனம் மோதி பெண் சாவு

தினத்தந்தி
|
19 Jun 2023 7:30 PM GMT

நல்லம்பள்ளி:

ஒகேனக்கல்லுக்கு சென்று திரும்பியபோது தொப்பூர் கணவாயில் மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார். அவருடைய கணவர் படுகாயம் அடைந்தார்.

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா

சேலம் மாவட்டம் முள்ளுவாடிகேட் பகுதியை சேர்ந்தவர் யாசின். இவரது மனைவி சாந்தினி (வயது 41). இவர்கள் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றனர். அங்கு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த அவர்கள் மீண்டும் இரவு சேலத்திற்கு திரும்பினர்.

தொப்பூர் கணவாயில் மோட்டார் சைக்கிள் மீது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இந்த விபத்தில் கணவன்-மனைவி 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து 2 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் சாந்தினி பரிதாபமாக இறந்தார். யாசினுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து, தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்