< Back
மாநில செய்திகள்
விபத்தில் தொழிலாளி சாவு
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

விபத்தில் தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
15 Jun 2023 7:30 PM GMT

ஓசூர்:

ஓசூர் ஆவலப்பள்ளி அடுத்த தோட்டகிரியை சேர்ந்தவர் கோபி (வயது 40). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் பெங்களூரு- ஓசூர் சாலையில் ஓசூர் ரிங் ரோடு இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த லாரி கோபி மீது மோதியது. அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கோபி இறந்து விட்டார். இந்த விபத்து குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்