< Back
மாநில செய்திகள்
பாப்பிரெட்டிப்பட்டி அருகேமோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு
தர்மபுரி
மாநில செய்திகள்

பாப்பிரெட்டிப்பட்டி அருகேமோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
4 Oct 2023 7:30 PM GMT

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி இறந்தார்.

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மேலனூரைச் சேர்ந்தவர் ஆண்டி (வயது 65). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் பாப்பம்பாடி அருகே காந்திநகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது நம்பிபட்டி பிரிவு ரோடு அருகே சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஆண்டி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஆண்டியை அங்கிருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் கோபிநாதம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்