< Back
மாநில செய்திகள்
தர்மபுரி அருகேமின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
தர்மபுரி
மாநில செய்திகள்

தர்மபுரி அருகேமின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
3 Oct 2023 7:00 PM GMT

தர்மபுரி மாவட்டம் மோதூர் அருகே உள்ள போலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 35). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் முனியப்பன் நடுப்பட்டி பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் போர்வெல் அமைப்பதற்கு நேற்று தொழிலாளர்களுடன் சென்றார். அங்கு கிணற்றுக்குள் இறங்கும்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் கிணற்றுக்குள் விழுந்த அவரை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மதிகோன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுெதாடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்