< Back
மாநில செய்திகள்
சமையல் செய்தபோது தீயில் கருகி பெண் சாவு
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

சமையல் செய்தபோது தீயில் கருகி பெண் சாவு

தினத்தந்தி
|
2 Oct 2023 7:30 PM GMT

சமையல் செய்தபோது தீயில் கருகி பெண் இறந்தார்.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி சிட்கோ தொழிற்சாலை பகுதியை சேர்ந்தவர் தீபக். இவருடைய மனைவி சரஸ்வதி (வயது 33). இவர் கடந்த மாதம் 19-ந் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவருடைய ஆடையில் தீப்பிடித்தது. இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரஸ்வதி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்