< Back
மாநில செய்திகள்
ஏரியில் தவறி விழுந்து முதியவர் சாவு
தர்மபுரி
மாநில செய்திகள்

ஏரியில் தவறி விழுந்து முதியவர் சாவு

தினத்தந்தி
|
23 Sep 2023 7:30 PM GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி புதுஜீவா நகரை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 62). இவர் நேற்று மாலை ஆலாபுரம் ஏரி அருகே சென்றார். அப்போது அங்குள்ள ஏரியில் தவறி விழுந்து முதியவர் இறந்தார். இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்