< Back
மாநில செய்திகள்
காரிமங்கலம் அருகேகார் மரத்தில் மோதி கட்டிட தொழிலாளி சாவு
தர்மபுரி
மாநில செய்திகள்

காரிமங்கலம் அருகேகார் மரத்தில் மோதி கட்டிட தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
19 Sep 2023 7:30 PM GMT

காரிமங்கலம் அருகே கார் மரத்தில் மோதி கட்டிட தொழிலாளி பலியானார்.

காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கார் மரத்தில் மோதியது

கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் அடுத்த வளைகாரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் சுபாஷ் (வயது 26), ராகுல் (25). கட்டிட தொழிலாளிகள். நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் விடுமுறைக்காக காரில் ஊருக்கு வந்தனர். பின்னர் இவர்கள் 2 பேரும் உறவினர் வீட்டுக்கு வந்து விட்டு மீண்டும் காரிமங்கலம் நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

இந்த காரை சுபாஷ் ஓட்டி வந்தார். காரிமங்கலம் அருகே திண்டல் பிரிவு சாலையில் கட்டுபாட்டை இழந்து கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதியது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி சுபாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராகுல் படுகாயம் அடைந்தார்.

போலீசார் விசாரணை

இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் ராகுலை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுபாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்