< Back
மாநில செய்திகள்
கோழியை மீட்க இறங்கியபோதுகிணற்றில் தவறி விழுந்த முதியவர் சாவு
தர்மபுரி
மாநில செய்திகள்

கோழியை மீட்க இறங்கியபோதுகிணற்றில் தவறி விழுந்த முதியவர் சாவு

தினத்தந்தி
|
16 Sep 2023 7:30 PM GMT

கோழியை மீட்க கிணற்றில் இறங்கியபோது முதியவர் தவறி விழுந்து இறந்தார்.

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே கோழியை மீட்க இறங்கியபோது கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பரிதாபமாக இறந்தார்.

கிணற்றில் விழுந்த கோழி

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள சின்னநூலஅள்ளியைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 70). விவசாயி. இவர் வளர்த்து வந்த கோழி வீட்டின் அருகே உள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இதையடுத்து கோவிந்தன் கோழியை மீட்க கிணற்றுக்குள் இறங்கினார்.

அப்போது அவர் தவறி கிணற்றில் விழுந்து இறந்தார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் தர்மபுரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கிணற்றில் இறங்கி கோவிந்தனின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

போலீசார் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீசார் விலைந்து கோவிந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோழியை மீட்க இறங்கிய முதியவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Tags :
மேலும் செய்திகள்