< Back
மாநில செய்திகள்
வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் சாவு
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் சாவு

தினத்தந்தி
|
21 Aug 2023 7:30 PM GMT

குருபரப்பள்ளி:

குருபரப்பள்ளி அருகே ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் கல்லூரி அருகே 70 வயது மதிக்கத்தக்க முதியவர் நடந்து சென்றார். அந்த வழியாக வந்த வாகனம் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதேபோல் ஓசூர் சிக்காரிமேடு பஸ் நிறுத்தம் அருகில் ஓசூர்- கிருஷ்ணகிரி சாலையை கடக்க முயன்ற சின்னராசு (31) என்பவர் மீது அந்த வழியாக வந்த வாகனம் மோதியது. இதில் சின்னராசு பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தினர்.

Related Tags :
மேலும் செய்திகள்