< Back
மாநில செய்திகள்
கடத்தூரில்விஷபூச்சி கடித்து பெண் சாவு
தர்மபுரி
மாநில செய்திகள்

கடத்தூரில்விஷபூச்சி கடித்து பெண் சாவு

தினத்தந்தி
|
14 Aug 2023 7:30 PM GMT

மொரப்பூர்:

கடத்தூரை சேர்ந்தவர் வேடியப்பன். இவரது மனைவி பேபி (வயது53). சம்பவத்தன்று அதிகாலை இவர் வீட்டுக்கு பின்புறமாக நடந்து சென்றார். அப்போது அவரது காலில் விஷ பூச்சி கடித்தது. அப்போது வலி இல்லாததால் சிகிச்சை எடுக்காமல் வீட்டில் இருந்துள்ளார். அவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை குடும்பத்தினர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் கடத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
மேலும் செய்திகள்