< Back
மாநில செய்திகள்
பாப்பிரெட்டிப்பட்டி அருகேவிஷம் குடித்த தொழிலாளி சாவு
தர்மபுரி
மாநில செய்திகள்

பாப்பிரெட்டிப்பட்டி அருகேவிஷம் குடித்த தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
7 Aug 2023 7:30 PM GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருடைய மகன் இளையராஜா (வயது 45). இவருக்கு வசந்தா (35) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளுக்கு மேலாகிறது.

இவர்களுக்கு குழந்தை இல்லாத விரக்தியில் இளையராஜா, நேற்று முன்தினம் விஷம் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தவர், மனைவியிடம் வாழ விருப்பமில்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து உறவினர்கள் அவரை பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஏ.பள்ளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்