< Back
மாநில செய்திகள்
மத்தூர் அருகேஉயர்அழுத்த மின்கோபுரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி சாவு
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

மத்தூர் அருகேஉயர்அழுத்த மின்கோபுரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
3 Aug 2023 7:30 PM GMT

மத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா ஆவாரங்குப்பம் அருகே உள்ள மேல்பள்ளத்தூரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45). தொழிலாளி. இவர் கடந்த 1-ந் தேதி மாலை தொகரப்பள்ளி சாலை சந்தூர் கூட்டு ரோட்டில் உள்ள உயர் அழுத்த மின்கோபுரத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்