< Back
மாநில செய்திகள்
பள்ளி வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி பெயிண்டர் சாவு 2 பேர் படுகாயம்
தர்மபுரி
மாநில செய்திகள்

பள்ளி வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி பெயிண்டர் சாவு 2 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
25 July 2023 7:30 PM GMT

பாலக்கோடு:

மகேந்திரமங்கலம் அருகே பள்ளி வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி பெயிண்டர் இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

பெயிண்டர் சாவு

தர்மபுரி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கவுரிசங்கர். இவரது மகன் தட்சிணாமூர்த்தி (வயது22). பெயிண்டர். இவர் நேற்று முன்தினம் மகேந்திரமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று காலை இவர் மகேந்திரமங்கலத்தை சேர்ந்த உறவினர்கள் ஆதிகேசவன் (17), தேவராஜ் (22) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் தர்மபுரி நோக்கி சென்று கொண்டு இருந்தார். மகேந்திரமங்கலம் அருகே மாணவர்களை ஏற்றி செல்வதற்காக சாலையோரம் நின்று இருந்த தனியார் பள்ளி வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் தட்சிணாமூர்த்தி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஆதிகேசவன், தேவராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

2 பேருக்கு தீவிர சிகிச்சை

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மகேந்திரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தட்சிணாமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்