< Back
மாநில செய்திகள்
அரூரில்லாரி மோதி பெண் சாவு
தர்மபுரி
மாநில செய்திகள்

அரூரில்லாரி மோதி பெண் சாவு

தினத்தந்தி
|
23 July 2023 7:30 PM GMT

அரூர்:

அரூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சித்ரா (வயது 40). அதேபகுதியை சேர்ந்தவர்கள் செல்லி (42), புதூரா(44). இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் பஸ் நிலைய பகுதியில் கடை கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி அவர்கள் மீது மோதியது. இதில் சித்ரா சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து அரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
மேலும் செய்திகள்