< Back
மாநில செய்திகள்
ஏரியூர் அருகேவாகனம் மோதி மூதாட்டி சாவு
தர்மபுரி
மாநில செய்திகள்

ஏரியூர் அருகேவாகனம் மோதி மூதாட்டி சாவு

தினத்தந்தி
|
21 July 2023 7:30 PM GMT

ஏரியூர்:

ஏரியூர் அருகே வாகனம் மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

மூதாட்டி சாவு

ஏரியூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னம்மாள் (வயது70). இவர் நேற்று முன்தினம் இரவு ஏரியூர் அருகே உள்ள புதுச்சோளப்பாடியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றார். அப்போது அந்த வழியாக வந்த, அடையாளம் தெரியாத வாகனம் மூதாட்டி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் மூதாட்டி படுகாயம் அடைந்தார். அவரை, அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது மூதாட்டி வழியிலேயே இறந்து விட்டது தெரியவந்தது.

விசாரணை

இந்த விபத்து குறித்து ஏரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டி மீது மோதிய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே நேற்று மூதாட்டியின் உடல் பென்னாகரம் அரசு மருத்துவமனையில், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்