< Back
மாநில செய்திகள்
ஊத்தங்கரையில் அரசு மருத்துவமனையில்குழந்தை பெற்ற பெண் திடீர் சாவு
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

ஊத்தங்கரையில் அரசு மருத்துவமனையில்குழந்தை பெற்ற பெண் திடீர் சாவு

தினத்தந்தி
|
20 July 2023 7:30 PM GMT

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை ஒன்றியம் நடுப்பட்டி ஊராட்சி எட்டிப்பட்டி தூவல் கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 25). இவருக்கு திரிஷா (20) என்ற மனைவியும், 1½ வயதில் ஜெகதேவ் என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் மீண்டும் கர்ப்பம் அடைந்த திரிஷா காட்டேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் பிரசவ வலி ஏற்பட்டதால் நேற்று முன்தினம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து திரிஷாவுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.

பின்னர் உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேய அவர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

Related Tags :
மேலும் செய்திகள்