< Back
மாநில செய்திகள்
அரியலூரில் நாளை மறுநாள் நடக்கிறது: அனைத்து கிராம ஊராட்சிகளில் சர்வதேச யோகா தினம்
அரியலூர்
மாநில செய்திகள்

அரியலூரில் நாளை மறுநாள் நடக்கிறது: அனைத்து கிராம ஊராட்சிகளில் சர்வதேச யோகா தினம்

தினத்தந்தி
|
18 Jun 2023 6:30 PM GMT

அரியலூரில் அனைத்து கிராம ஊராட்சிகளில் சர்வதேச யோகா தினம் நாளை மறுநாள் நடக்கிறது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை மறுநாள் (புதன்கிழமை) சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. எனவே, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறும் யோகா தின நிகழ்ச்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் அதிகளவில் கலந்து கொள்ள வேண்டும், என்று மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்