< Back
மாநில செய்திகள்
2-வது நாளாக தீவிரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

2-வது நாளாக தீவிரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

தினத்தந்தி
|
29 Jun 2022 3:40 PM GMT

2-வது நாளாக தீவிரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறையில் நேற்று 2-வதுநாளாக தீவிரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல் மற்றும் போதை பொருட்கள் கடத்தலை தடுக்க ஆண்டுக்கு இரண்டு முறை சாகர்கவாச் எனும் தீவிரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படும். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த கடல் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படவில்லை.

இந்த நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையில் சாகர்கவாச் எனும் தீவிரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடந்தது. பின்னர் படகு மூலம் கடலில் வேதாரண்யம் முதல் நாகை வரை ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் கடலோர காவல் குழும போலீசார், வேதாரண்யம் போலீசார், உளவு பிரிவு போலீசார், கியூ பிராஞ்ச் போலீசார் என 50-க்கும் மேற்பட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

ரோவர் படகு மூலம் ரோந்து பணி

இந்தநிலையில் நேற்று 2-வதுநாளாக ரோந்து பணி நடைபெற்றது. அப்போது கடலோர காவல் படையினருக்கு சொந்தமான நீரிலும், நிலத்திலும் செல்லக்கூடிய ரோவர் படகு மூலம் கோடியக்கரையில் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் வேதாரண்யம் பகுதியில் உள்ள 9 சோதனை சாவடிகளிலும் தீவிர வாகன சோதனை நடைபெற்றது.

இந்த பயிற்சி ஒத்திகையில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் பன்னீர்செல்வம், ஆனந்த வடிவேலன் மற்றும் போலீசார் ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை கடற்கரையில் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதா? மீன்பிடி படகில் தீவிரவாதிகள் வரும் வாய்ப்புகள் உள்ளதா? மீனவர்களின் படகை பயன்படுத்தி கடத்தல் நடைபெறுகிறதா? என்று சோதனை செய்தனர்.

மேலும் செய்திகள்