< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
ஆபத்தான மின்கம்பம்
|10 Jun 2022 7:53 PM GMT
ஆபத்தான மின்கம்பம்
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை அண்ணாநகர் அருகே திருவள்ளுவர் நகர் 2-வது தெருவில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. குறிப்பாக மின்கம்பத்தின் அடிப்பகுதியில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதன் காரணமாக மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மின்கம்பம் உள்ள பகுதியை பொதுமக்கள், வாகனஓட்டிகள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், திருவள்ளுவர்நகர்.