< Back
மாநில செய்திகள்
அண்ணா பிறந்த நாள் சைக்கிள் போட்டி
வேலூர்
மாநில செய்திகள்

அண்ணா பிறந்த நாள் சைக்கிள் போட்டி

தினத்தந்தி
|
14 Oct 2023 5:56 PM GMT

அண்ணா பிறந்த நாள் சைக்கிள் போட்டியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், அண்ணா பிறந்த நாளையொட்டி வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டி நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பள்ளிக்குப்பத்தில் தொடங்கி கண்டிப்பேடு பஸ் நிறுத்தம் வரை போட்டி நடந்தது.

இந்த போட்டியில் 13 வயது, 15 வயது, 17 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடந்தது. இதில், 109 மாணவர்கள், – 52 மாணவிகள் என மொத்தம் 161 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு முதல் பரிசு ரூ.5ஆயிரம், இரண்டாவது பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாவது பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. அதேபோல், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின்ஜான், தாசில்தார் ஜெகதீஸ்வரன, மாநகராட்சி கவுன்சிலர் விமலா சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்