< Back
மாநில செய்திகள்
கைதான 3 பேருக்கு காவல் நீட்டிப்பு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

கைதான 3 பேருக்கு காவல் நீட்டிப்பு

தினத்தந்தி
|
6 July 2023 6:45 PM GMT

கைதான 3 பேருக்கு காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது.

ராமநாதபுரம் சிவஞானபுரத்தை சேர்ந்த சேகர் மகன் அசோக்குமார் (வயது 28). இவர் வழக்கு ஒன்றில் ஜாமீன் பெற்று ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் எண்.2 கோர்ட்டில் கையெழுத்திட வந்தபோது கடந்த மாதம் ஆர்.எஸ்.மடையை சேர்ந்த ராஜ்குமார் என்ற கொக்கி குமார் (32) என்பவர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து வாளால் வெட்டினார். இதனை தொடர்ந்து அவரை காலில் துப்பாக்கியால் சுட்டுபிடித்த போலீசார் அவருக்கு உடந்தையாக வந்த ஆர்.எஸ்.மடை ஜமுனா சண்முகநாதன் (22), போண்டா அஜித் (26) ஆகியோரையும் கைது செய்தனர். இவர்கள் 3 பேரும் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்காக மேற்கண்ட 3 பேரும் பலத்த பாதுகாப்புடன் ராமநாதபுரம் வன்கொடுமை தடுப்பு சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் நேற்று காலை ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி கோபிநாத் 3 பேருக்கும் வரும் 13-ந்தேதி வரை காவல் நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்