< Back
தமிழக செய்திகள்

அரியலூர்
தமிழக செய்திகள்
பஸ்-ரெயில்களில் பயணிகள் கூட்டம்

23 Oct 2022 1:23 AM IST
பஸ்-ரெயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
தீபாவளி பண்டிகை நாளை(திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. வெளியூர்களில் வசிப்பவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். மேலும் நேற்று முன்தினம் முதல் தொடர் முறை வந்ததால் ஏராளமானவர்கள் பஸ்கள், ரெயில்கள் மூலம் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர். இதனால் அரியலூரில் பஸ்கள் மற்றும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.