< Back
மாநில செய்திகள்
மயிலாடுதுறையில் கனமழையால் நீரில் மூழ்கிய பயிர்கள் - இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
மாநில செய்திகள்

மயிலாடுதுறையில் கனமழையால் நீரில் மூழ்கிய பயிர்கள் - இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

தினத்தந்தி
|
28 Aug 2022 5:30 PM GMT

பயிர் சேதங்களை கணக்கிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குமாறு விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் திருவிழந்தூர், மாப்படுகை, சோழம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 8 ஆயிரம் ஏக்கருக்கு மேல் அறுவடை நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளன.

விவசாய நிலங்களில் தேங்கிய மழைநீரை வடிய வைக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். பயிர் சேதங்களை கணக்கிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குமாறு விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்