< Back
மாநில செய்திகள்
ரூ.15 லட்சத்துக்க மாடுகள் விற்பனை
திருப்பூர்
மாநில செய்திகள்

ரூ.15 லட்சத்துக்க மாடுகள் விற்பனை

தினத்தந்தி
|
4 Dec 2022 6:36 PM GMT

பழையகோட்டை மாட்டுச்சந்தையில் ரூ.15 லட்சத்துக்க மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.


பழையகோட்டை மாட்டுச்சந்தையில் ரூ.15 லட்சத்துக்க மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.

மாட்டுசந்தை

நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் புகழ் பெற்ற காங்கயம் இன காளைகள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. அதன்படி சந்தை நேற்று கூடியது.

இந்த சந்தைக்கு திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், கோவை, திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த காங்கயம் இன காளைகள் வளர்ப்போர், நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள், காங்கயம் இன காளை பராமரிப்பு விருத்தியாளர்கள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

ரூ.15 லட்சத்துக்கு விற்பனை

அதன்படி காங்கயம் இன பெரிய பூச்சி காளைகள், இளம் பூச்சி காளைகள், செவலை பசுமாடுகள், மயிலை பூச்சி காளைகள், மயிலை பசுமாடுகள், மயிலை கிடாரிகள், காராம்பசு கிடாரி கன்றுகள் என ரகம் வாரியாக விற்பனை செய்யப்பட்டது. இந்த சந்தையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மொத்தம் 74 மாடுகளில் 45 மாடுகள் ரூ.15 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. சந்தையில் வழக்கத்தை விட பசுமாடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

Related Tags :
மேலும் செய்திகள்