< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
கந்தம்பாளையம் அருகேகிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு
|12 Jan 2023 6:45 PM GMT
கந்தம்பாளையம்:
கந்தம்பாளையம் அருகே குன்னமலை ஊராட்சி ஆத்திகாட்டை சேர்ந்தவர் ராமசாமி (வயது 70). விவசாயி. இவருடைய தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில் நேற்று மாலை பசு மாடு ஒன்று தவறி விழுந்தது. இதுகுறித்து உடனடியாக திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றில் கயிறு கட்டி தவறி விழுந்த பசு மாட்டை உயிருடன் மீட்டனர்.